×

சேலம் அருகே அதிவேகமாக வந்த லாரி, டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு..!!

சேலம்: சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் பகுதியில் அதிவேகமாக வந்த லாரி, டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள உத்தமசோழபுரம் பகுதியில் அதிவேகமாக சென்ற லாரி ஒன்று முன்னே சென்று கொண்டிருந்த கார், டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது மோதிக்கொண்டே சென்றது. இந்த கோர விபத்தில் டிராக்டர் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதுமட்டுமின்றி காரில் வந்த 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். சீட் பெல்ட் அணிந்ததன் காரணமாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

மேலும் இந்த விபத்தில் காரில் சிக்கிய சிறுவனை பொதுமக்கள், போலீசார் சுமார் 1 மணி நேரம் போராடி மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உத்தமசோழபுரம் பகுதியில் வாகனங்கள் வேகமாக செல்வதை கட்டுப்படுத்துவதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் லாரியை ஓட்டிவந்த ஓட்டுநர் மதுபோதையில் வாகனத்தை இயக்கி வந்ததாக தெரிகிறது. லாரி ஓட்டுனரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவற்றை சரிசெய்யும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

The post சேலம் அருகே அதிவேகமாக வந்த லாரி, டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Salem ,Uttamasholapuram ,Salem district ,Kondalampatti ,Dinakaran ,
× RELATED சேலம் அருகே மின்சாரம் தாக்கி தந்தை கண்முன்னே மகன் உயிரிழந்ததால் சோகம்..!!